2019 உலகக் கோப்பையில் என்னை நீக்கியதற்கு இதுதான் காரணம்.. அம்பதி ராயுடு ஓபன் டாக்!

Published by
பாலா கலியமூர்த்தி

2019 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததற்கான காரணங்கள் குறித்து மனம் திறந்தார் அம்பதி ராயுடு.

2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தன்னை தேர்ந்தெடுக்காதது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அம்பதி ராயுடு நீக்கப்பட்டு, அவரது இடத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார்.

இந்த தேர்வு குறித்து, அப்போதைய இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே.பிரசாத், விஜய் சங்கர் ஒரு 3 டைமென்ஷன் பிளேயர் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். இதை சமூக வலைதளத்தில் நக்கலாக அப்பொழுது அம்பதி ராயுடு கேலி செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது இதுகுறித்து மனதிறந்துள்ளார் ராயுடு. ஐபிஎல் 2023 முடிவடைந்த பிறகு, சமீபத்திய நேர்காணலில் பேசிய அம்பதி ராயுடு, தேர்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவருடன் தனக்கு சில சிக்கல்கள் இருந்ததாக வெளிப்படுத்தினார்.  தான் ஆரம்ப கட்டத்தில் விளையாடும் போது, எம்.எஸ்.கே பிரசாத்துடன் ஒரு சில பிரச்சனைகள் இருந்ததாக கூறினார்.

2019 உலகக் கோப்பைக்கு நான் தேர்வு செய்யப்படாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தேர்வுக்குழு ரஹானே அல்லது அவரைப்போல் ஒரு அனுபவம் வாய்ந்த மூத்த வீரரை எனக்கு பதிலாகத் தேர்ந்தெடுத்து இருந்தால் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், என்னுடைய இடத்தில் அனுபவம் இல்லாத ஒரு இளம் வீரரை அவர்கள் எப்படி தேர்வு செய்தார்கள் என்று புரியவே இல்லை.

எனக்கு இந்த இடத்தில்தான் கோபம் வந்தது. இது விஜய் சங்கரை பற்றியது அல்ல. அவர் மீது எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. என்னதான் யோசித்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆறாவது, ஏழாவது இடத்தில் விளையாடும் ஒரு வீரரை நான்காவது இடத்தில் விளையாடும் வீரருக்குப் பதிலாக எப்படி தேர்வு செய்து விளையாட வைக்க முடியும்? என்று கேள்வி எழுந்தாகவும் கூறினார்.

இதனிடையே, இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒருநாள் அணியில் நம்பர் 4 இடத்தைப் பிடித்தவர்களில் ராயுடுவும் ஒருவர். இருப்பினும், தேர்வாளர்கள் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரை தேர்வு செய்ததால், உலகக் கோப்பை அணியில் இருந்து அம்பதி ராயுடு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

11 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago