முக்கியச் செய்திகள்

திலக் வர்மா உலகக் கோப்பை போட்டிக்கு தகுதியானவர்! முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!

Published by
பால முருகன்

ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய திலக் வர்மா தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 தொடரில் விளையாட அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி அவர் விளையாடி வருகிறார் என்றே கூறலாம்.

Tilak Varma [file image]

குறிப்பாக முதல் டி20 போட்டியில் 39 ரன்கள், இரண்டாவது போட்டியில் 51 ரன்கள், மூன்றாவது போட்டியில் 49 ரன்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டியிலும் அருமையாக விளையாடி அட்டகாசமான பார்மில் இருக்கிறார். அவருடைய பேட்டிங் பற்றி பலரும் அவரை பாராட்டி பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் அண்மையில் ஒரு பேட்டியில் திலக் வர்மா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் அருமையாக விளையாட தகுதியானவர். அவரை வருகின்ற உலகக்கோப்பை போட்டியில் அணியில் சேர்த்தால் கூட ஆச்சரியபட வேண்டாம்” என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” கடந்த 3 போட்டிகளில் திலக் வர்மாவின் பேட்டிங் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது. அவருடைய பேட்டிங் பல அனுபவங்கள் வாய்ந்த வீரர்கள் விளையாடுவது போல இருக்கிறது.

அணியில் எந்த தருணத்தில் எப்படி விளையாடவேண்டும் எப்படி விளையாடக்கூடாது எந்த சமயத்தில் நிதானமாக விளையாடவேண்டும் எந்த சமயத்தில் அதிரடியாக விளையாடவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு விளையாடுகிறார். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் இருக்கும் வரை அவர் வேறுமாதிரி விளையாடினார் அவர் அட்டமிழந்த பிறகு அவர் வேறுமாதிரி விளையாடினார்.

Wasim Jaffer about tilak varma [file image]

என்னை பொறுத்தவரை திலக் வர்மா டி20 போட்டியில் மட்டும் தான் அருமையாக விளையாடுவார் என இல்லை 50 ஓவர்கள் போட்டியில் கூட அவரால் நன்றாக விளையாட முடியும். இவரை போல ஒரு வீரர் நம்மளுடைய அணியில் இருப்பது நமது அணிக்கு பக்க பலமாக இருக்கும். மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு இடது கை வீரர் இருந்தால் நல்லது தான். எனவே அவருடைய திறமைகளை பார்த்து அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கவேண்டும்” என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

8 minutes ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

45 minutes ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

1 hour ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

2 hours ago

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!

லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…

2 hours ago

”தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை அச்சுறுத்துகிறது” – முதல்வர் ஸ்டாலின் பதிவு.!

சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…

4 hours ago