கொரோனாவில் இருந்து குணமடைந்தார் நியூசிலாந்து கிரிக்கெட் டிம் சீஃபர்ட்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சீஃபர்ட் கடந்த மே 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக சிகிச்சைப்பெற்று வந்த டிம் சீஃபர்ட் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…