Salem won [Image Source : Twitter/@TNPremierLeague]
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ITT vs SLST போட்டியில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் டிஎன்பிஎல் தொடரில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்ய களமிறங்கிய சேலம் அணி 20 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதில் சன்னி சந்து அரைசதம் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் திருப்பூர் அணியில் முதலில் ராதாகிருஷ்ணன், துஷார் ரஹேஜா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் துஷார் ரஹேஜா 22 ரன்களில் ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய சாய் கிஷோர் பொறுப்பாக விளையாடி 26 ரன்கள் எடுத்தார்.
ஒருபுறம் நிதானமாக விளையாடிய ராதாகிருஷ்ணன் 16 மட்டுமே எடுத்து வெளியற, மறுபுறம் விஜய் சங்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சதுர்வேத், ராஜேந்திரன் விவேக், அனிருத் மற்றும் புவனேஸ்வரன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.
முடிவில், திருப்பூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேலம் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 26 ரன்களும், துஷார் ரஹேஜா மற்றும் அனிருத் தலா 22 ரன்களும் குவித்தனர். சேலம் அணியில் சச்சின் ரதி, செல்வ குமரன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…