நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 399 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணி 400 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி மோசமான ஆட்டம் காரணமாக 22 ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்கள் எடுத்து 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு சிரமங்கள் குறையவில்லை. தற்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். நேற்றைய போட்டியின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த போட்டியில் தனது 9-வது ஓவரில் ரீஸ் டாப்லி பந்துவீசும்போது காயம் அடைந்தார். டாப்லியின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டு அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த ஓவரில் ரீஸ் டாப்லி ஐந்து பந்துகளை மட்டுமே வீச முடிந்தது. மீதம் இருந்த பந்தை ஜோ ரூட் வீசி ஓவரை முடித்தார்.
முதல் ஓவரிலேயே ரீஸ் டாப்லி குயின்டன் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்துக்கு முதல் விக்கெட்டை எடுத்து கொடுத்தார். நேற்றைய போட்டியில் ரீஸ் டாப்லி 8.5 ஓவர் வீசி 88 ரன் கொடுத்து 3 விக்கெட்டை பறித்தார். ரீஸ் டாப்லி அணியில் இருந்து விலகியது இங்கிலாந்துக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த உலகக் கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் மோசமான பார்ம் குறையாமல் தொடர்கிறது.
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 1-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் இங்கிலாந்துக்கு கீழே ஆப்கானிஸ்தான் மட்டுமே உள்ளது. நியூசிலாந்து தவிர இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…