நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 399 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணி 400 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி மோசமான ஆட்டம் காரணமாக 22 ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்கள் எடுத்து 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு சிரமங்கள் குறையவில்லை. தற்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். நேற்றைய போட்டியின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த போட்டியில் தனது 9-வது ஓவரில் ரீஸ் டாப்லி பந்துவீசும்போது காயம் அடைந்தார். டாப்லியின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டு அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த ஓவரில் ரீஸ் டாப்லி ஐந்து பந்துகளை மட்டுமே வீச முடிந்தது. மீதம் இருந்த பந்தை ஜோ ரூட் வீசி ஓவரை முடித்தார்.
முதல் ஓவரிலேயே ரீஸ் டாப்லி குயின்டன் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்துக்கு முதல் விக்கெட்டை எடுத்து கொடுத்தார். நேற்றைய போட்டியில் ரீஸ் டாப்லி 8.5 ஓவர் வீசி 88 ரன் கொடுத்து 3 விக்கெட்டை பறித்தார். ரீஸ் டாப்லி அணியில் இருந்து விலகியது இங்கிலாந்துக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த உலகக் கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் மோசமான பார்ம் குறையாமல் தொடர்கிறது.
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 1-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் இங்கிலாந்துக்கு கீழே ஆப்கானிஸ்தான் மட்டுமே உள்ளது. நியூசிலாந்து தவிர இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…