இன்று முதல் ஓய்வு பெறுகிறார் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார்!

Published by
Surya

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 9 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 37 வயதாகும் இவர், 2004 ஆம் ஆண்டு முதல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். 2010 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடிய அவருக்கு 2013 ஆம் ஆண்டிற்கு பின் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவர் கடைசியாக கடந்தாண்டு ரஞ்சி கோப்பை போட்டியில் புதுச்சேரி அணி சார்பாக விளையாடினார். 139 போட்டிகள் விளையாடிய அவர், 504 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமின்றி, ரஞ்சி போட்டியில் 442 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றார். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர்,கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினர்.

இந்நிலையில், இவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், “என்னைப்பொறுத்தலவில் கிரிக்கெட் என்பது விளையாட்டு இல்லை. அது வாழ்க்கை. அந்த வாழ்க்கை, எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!

அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!

சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு…

8 hours ago

திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட…

9 hours ago

”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!

சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…

9 hours ago

மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு…

9 hours ago

படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியின்போது ஷாருக் கானுக்கு பலத்த காயம்.?

மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்‌ஷன்…

10 hours ago

கும்மிடிப்பூண்டியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்.., சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவன் கைது.!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…

11 hours ago