இன்று முதல் ஓய்வு பெறுகிறார் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார்!

Published by
Surya

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 9 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 37 வயதாகும் இவர், 2004 ஆம் ஆண்டு முதல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். 2010 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடிய அவருக்கு 2013 ஆம் ஆண்டிற்கு பின் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவர் கடைசியாக கடந்தாண்டு ரஞ்சி கோப்பை போட்டியில் புதுச்சேரி அணி சார்பாக விளையாடினார். 139 போட்டிகள் விளையாடிய அவர், 504 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமின்றி, ரஞ்சி போட்டியில் 442 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றார். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர்,கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினர்.

இந்நிலையில், இவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், “என்னைப்பொறுத்தலவில் கிரிக்கெட் என்பது விளையாட்டு இல்லை. அது வாழ்க்கை. அந்த வாழ்க்கை, எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago