விராட் இன்று சதமடிப்பது தான், கங்குலிக்கு செய்யும் மிகப்பெரிய சமர்ப்பணம்; ஸ்ரீசாந்த்.!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடரில் இன்று டெல்லிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்து, டாடாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

16-வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது, மேலும் ஐபிஎலின் முதல் பாதி முடிந்துள்ள நிலையில் இரண்டாவது பாதி, பிளேஆஃப் சுற்றை உறுதி செய்யும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன.

இந்த போட்டியில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி, சதமடிக்க வேண்டும் எனவும் அதனை சவுரவ் கங்குலிக்கு (டாடா) சமர்ப்பிக்க வேண்டும் எனவும் முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் க்கு அளித்த பெட்டியில் ஸ்ரீசாந்த் இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீசாந்த் கூறியதாவது, டெல்லி-பெங்களூரு ஆட்டத்தினை நான் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

வார்னர் மற்றும் கோலி இடையே நடக்கும் ஆட்டத்தினை பார்ப்பதற்கு மற்றும் நோர்ட்ஜெ விற்கு எதிராக பெங்களூரு அணி வீரர்கள் எவ்வாறு விளையாடப் போகிறார்கள் என்பதைக் காணவும் நான் ஆவலாக உள்ளேன் என்று அவர் கூறினார். முக்கியமாக விராட் கோலி இன்று சதமடித்து அதனை டாடாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

விராட் நீங்கள் களத்தில் நீங்களாகவே இருங்கள், RCB க்கு வெற்றி பெற்று தாருங்கள் என ஸ்ரீசாந்த் மேலும் தெரிவித்தார். ஏற்கனவே கோலி மற்றும் சவுரவ் கங்குலி இடையே சில காலமாக பனிப்போர் நடைபெற்று வருகிறது, கடந்த முறை இரு அணிகளும் மோதிய போட்டியிலும் கோலி, டாடாவை பார்த்து முறைத்ததாகவும், இருவரும் கை கொடுக்காமல் சென்றதாகவும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.</


p>

Published by
Muthu Kumar

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

11 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

11 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

11 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

12 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

13 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

13 hours ago