டிராவிட்டிற்கு பதிலாக முக்கிய பதவிக்கு பொறுப்பேற்கவுள்ள விவிஎஸ் லட்சுமண்!

Published by
Edison

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக விவிஎஸ் லட்சுமண் பொறுப்பேற்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்ததால், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வந்த முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப் பட்டார்.அதன்படி,வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து டிராவிட் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

இதனால், டிராவிட் வகித்த தேசிய கிரிக்கெட் அகாடமி பதவிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை மேற்கொண்டு வந்தது.மேலும்,டிராவிட்டிற்குப் பிறகு சிறந்த முறையில் பொறுப்பேற்கக்கூடிய ஒருவரைக் கொண்டிருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிசிசிஐ வட்டாரம் இந்தியா டுடேவிடம் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில்,முன்னாள் இந்திய பேட்டர் விவிஎஸ் லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.இதனை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி இன்று  உறுதிப்படுத்தியுள்ளார்.இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு  இப்பதவிக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

லட்சுமண் உள்நாட்டு கிரிக்கெட்டில் பெங்கால் அணியின் பேட்டிங் ஆலோசகராக உள்ளார், மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் வழிகாட்டியாகவும் உள்ளார். இது தவிர,46 வயதான சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான லக்‌ஷ்மண், இந்திய அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் 17 சதங்களுடன் மொத்தம் 8781 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

35 minutes ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

1 hour ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

1 hour ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

3 hours ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

3 hours ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

16 hours ago