#T20 World Cup: வார்னர் அதிரடி; 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி..!

Published by
murugan

ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன் எடுத்து  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் 22-வது போட்டியில் இன்று ஆஸ்திரேலியா- இலங்கை அணி துபாய் சர்வதேச கிரிக்கெட் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி  இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசல் பெரேரா, பாத்தும் நிஸ்ஸங்க இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் பாத்தும் நிஸ்ஸங்க 7 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்து இறங்கிய அசலங்கா, குசல் பெரேரா உடன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். இருவரும் தலா 35 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அடுத்து மத்தியில் இறங்கிய ராஜபக்சே 33 ரன் எடுத்து அடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன் எடுத்து வெளியேற இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியில் ஜம்பா, கம்மின்ஸ், மிட்டல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 155 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் சிறப்பாக விளையாடினர்.அதிலும் குறிப்பாக டேவிட் வார்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். நிதானமாக விளையாடி வந்த ஆரோன் பிஞ்ச் 37 ரன்னில்  போல்டானார்.

அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் டேவிட் வார்னர் அரை சதம் விளாசி 65 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரி அடங்கும் பின்னர் அடுத்து களம் கண்ட ஸ்மித் சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்ற இறுதியாக ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ஸ்மித் 28 * ரன் எடுத்து நின்றார்.

Published by
murugan

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

10 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

14 hours ago