இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளாயாடும் பொது ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர வீரரான வார்னருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள், டி-20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், மூன்றாம் போட்டியில் ஆறுதல் வெற்றியை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 2 ஆம் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் போட்டியின் பாதியில் வெளியேறினார். நான்காவது ஓவரில், ஷிகர் தவான் பந்தை மிட்-ஆஃப் சைடு நோக்கி அடிக்க பந்தை வார்னர் குறுக்கே வந்து பந்தைத் தடுக்க ஒரு டைவ் அடித்தார். அவர் இரண்டாவது முறையாக உருட்டும்போது காயம் ஏற்பட்டது.
இதனால் வார்னர் களத்திலேயே சுருண்டு விழுந்து, நடக்க முடியாமல் துடித்தார். பின்னர் வார்னரை மைதானத்திற்கு வெளியே அழைத்து செல்லப்பட்டார். இந்த காயம் காரணமாக ஒருநாள், டி-20 தொடரில் இருந்து வார்னர் விலகுவதாக அறிவித்தார். அதன்பின் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…