ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டேஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது போட்டி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்களின் ஒருவரான மார்கஸ் ஹாரிஸ் 28 பந்துகள் விளையாடி 3 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.
மற்றோரு தொடக்க வீரராக களமிறங்கியிருந்த டேவிட் வார்னர் நிதானமாக விளையாடி வந்த நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். முதல் டெஸ்டிலும் 6 ரன்களில் சதத்தை தவறவிட்ட வார்னர், இப்போட்டியில் சதம் அடிப்பார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆஷஸ் தொடரில் அடுத்தடுத்து சத்தத்தை தவறவிட்ட வார்னர், அவுட்டாகி சோகத்துடன் வெளியேறினாலும் மைதானத்தில் இருந்த சிறுவனுக்கு தனது கிளவுஸை கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார். இறுதியாக ஆஷஸ் 2வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் முடிவில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 89 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து, 221 ரன்கள் எடுத்துள்ளது.
மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த மார்னஸ் லாபுசாக்னே 95 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 18 எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி பந்துவீச்சை பொறுத்தளவில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும்…
தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…
சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…