Mayank Yadav [file image]
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் மயாங்க் யாதவின் காயம் குறித்தும் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதை குறித்தும் லக்னோ அணியின் பயிற்சியாளர் வினோத் பிஸ்ட் விளக்கி கூறி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் கலக்கி கொண்டு வரும் இளம் வேக பந்து வீச்சாளர் தான் மயாங்க் யாதவ். இவர் வீசும் 150 – 156 கி.மீ வேகத்திற்கு எதிர்த்து எந்த ஒரு பேட்ஸ்மேனாளும் ஈடு கொடுத்து நிற்க முடியாமல் தடுமாறினார்கள். லக்னோ அணி விளையாடிய கடைசி 3 போட்டிகளில் 2 போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிய மயாங்க் யாதவ் தொடர்ந்து இரண்டு முறை ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார்.
ஐபிஎல் தொடரில் ஒரு இளம் வீரர் அறிமுகமான முதல் போட்டியிலும், அதற்கு அடுத்த போட்டியிலும் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும். ஆனால், கடைசியாக குஜராத் அணியுடனான போட்டியில் அவர் வெறும் 1 ஓவரை மட்டும் வீசி இருந்தார். அந்த 1 ஓவரிலும் இவர் சாதரண வேகத்திலே பந்து வீசி இருப்பார். அதாவது சராசரியாக அந்த ஓவரை 140 கி.மீ வேகத்திலும், 139 கீ.மீ வேகத்திலுமே வீசி இருப்பார்.
அதன் பின் காயம் காரணமாக அவர் அந்த போட்டியில் இருந்து வெளியேறியவுடன் அதன் பிறகு அந்த போட்டியில் பந்து வீசி இருக்க மாட்டார். இதனை பற்றி விவரிக்க லக்னோ அணியின் பயிற்சியாளரான வினோத் பிசிட் கடைசி போட்டி முடிந்த அடுத்த நாள் பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார். அவர் பேசுகையில், “மயங்க் யாதவ் அடிவயிற்றின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது, அந்த காயத்தின் வலி அதிகரித்ததால் அநத போட்டியில் அதன் பிறகு அவர் பந்து வீசவில்லை.
அடுத்த போட்டியில் விளையாட அவரும், அவருடன் நாங்களும் ஆர்வகமாக இருக்கிறோம். ஆனால், அந்த காயத்தை பொறுத்து அவர் அடுத்த போட்டியில் விளையாட வைப்போம். மேலும், அவர் மீண்டும் அணியில் விளையாடும் போது, அவரது பணிச்சுமையையும் நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். அவரை விரைவில் களத்தில் பார்ப்போம் என்று நம்புகிறோம்”, என்று லக்னோ அணியின் பயிற்சியாளரான வினோத் பிசிட் பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார்.
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…