‘அவர் மீண்டும் வரும் போது பணிச்சுமையை கண்காணிப்போம்’ ! மயாங்க் யாதவ்க்கு அப்படி என்ன ஆச்சு ?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் மயாங்க் யாதவின் காயம் குறித்தும் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதை குறித்தும் லக்னோ அணியின் பயிற்சியாளர் வினோத் பிஸ்ட் விளக்கி கூறி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் கலக்கி கொண்டு வரும் இளம் வேக பந்து வீச்சாளர் தான் மயாங்க் யாதவ். இவர் வீசும் 150 – 156 கி.மீ வேகத்திற்கு எதிர்த்து எந்த ஒரு பேட்ஸ்மேனாளும் ஈடு கொடுத்து நிற்க முடியாமல் தடுமாறினார்கள். லக்னோ அணி விளையாடிய கடைசி 3 போட்டிகளில் 2 போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிய மயாங்க் யாதவ் தொடர்ந்து இரண்டு முறை ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார்.

ஐபிஎல் தொடரில் ஒரு இளம் வீரர் அறிமுகமான முதல் போட்டியிலும், அதற்கு அடுத்த போட்டியிலும் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும். ஆனால், கடைசியாக குஜராத் அணியுடனான போட்டியில் அவர் வெறும் 1 ஓவரை மட்டும் வீசி இருந்தார். அந்த 1 ஓவரிலும் இவர் சாதரண வேகத்திலே பந்து வீசி இருப்பார். அதாவது சராசரியாக அந்த ஓவரை 140 கி.மீ வேகத்திலும், 139 கீ.மீ வேகத்திலுமே வீசி இருப்பார்.

அதன் பின் காயம் காரணமாக அவர் அந்த போட்டியில் இருந்து வெளியேறியவுடன் அதன் பிறகு அந்த போட்டியில் பந்து வீசி இருக்க மாட்டார். இதனை பற்றி விவரிக்க லக்னோ அணியின் பயிற்சியாளரான வினோத் பிசிட் கடைசி போட்டி முடிந்த அடுத்த நாள் பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார். அவர் பேசுகையில், “மயங்க் யாதவ் அடிவயிற்றின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது, அந்த காயத்தின் வலி அதிகரித்ததால் அநத போட்டியில் அதன் பிறகு அவர் பந்து வீசவில்லை.

அடுத்த போட்டியில் விளையாட அவரும், அவருடன் நாங்களும் ஆர்வகமாக இருக்கிறோம். ஆனால், அந்த காயத்தை பொறுத்து அவர் அடுத்த போட்டியில் விளையாட வைப்போம். மேலும், அவர் மீண்டும் அணியில் விளையாடும் போது, அவரது பணிச்சுமையையும் நாங்கள் தொடர்ந்து  கண்காணிப்போம். அவரை விரைவில் களத்தில் பார்ப்போம் என்று நம்புகிறோம்”, என்று லக்னோ அணியின் பயிற்சியாளரான வினோத் பிசிட் பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார்.

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

1 hour ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

2 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

2 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

3 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

4 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

4 hours ago