Bengaluru captain Faf du Plessis speech after defeat [image source: ipl/bcci]
ஐபிஎல்2024: முதல் இன்னிஸில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல என்று தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 தொடரின் 10வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்தது. இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 83 அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இலக்கை சுலபமாக எட்டியது.
அதாவது, 16.5 ஓவரில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 186 ரன்களை எடுத்து இந்த ஐபிஎல் சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியதாவது, இது வித்தியாசமான ஒன்று, முதல் இன்னிங்ஸ் விக்கெட் என்பது இரண்டு வேகமானது என்று நாங்கள் நினைத்தோம்.
அதன்படி, பவுலர்கள் கட்டர்ஸ் மற்றும் பேக் ஆஃபி லென்த் பால் போடும்போது பேட்டர்கள் சிரமப்பட்டதை பார்த்தோம். இதனால் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல. முதல் இன்னிங்ஸில் பிட்ச் இரண்டு விதமாக இருந்ததால் சிறப்பாக விளையாடிய விராட் கோலியே ரன்கள் அடிக்க சிரமப்பட்டார்.
இருப்பினும், கொஞ்சம் கொஞ்சமாக பனி வந்ததால் நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம். ஆனால், எதிரணி பேட்டிங் செய்யும்போது பவர் பிளேவில் நரேன் மற்றும் சால்ட் அதிரடியாக விளையாடி எங்களது பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர். அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
நல்ல கிரிக்கெட் ஷாட்களை அடித்து ஆட்டத்தை அவர்கள் பக்கம் திருப்பினர். நரேன் இருப்பதால் ஸ்பின் பவுலிங் எடுபடாது, இதனால் வேகப்பந்துவீச்சாளரை பயன்படுத்தினோம். இருந்தாலும் முதல் ஆறு ஓவர்களில் ஆட்டத்தை கைப்பற்றினர். இந்த பிட்சியில் பந்தை இரண்டு பக்கத்திலும் சுழற்றக்கூடிய ஒரு ஸ்பின்னர் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் எங்கள் அணியின் செட்-அப்பில் அந்த ஆப்சன் இல்லை. இதுபோன்று ரசல் போன்று மெதுவாக பந்துகளை வீசக்கூடியவர்களை இந்த ஆடுகளத்தில் எதிர்கொள்ள மிகவும் கடினம் என்று நாங்கள் உணர்ந்தோம். எனவே, இந்த போட்டியின் மூலம் நாங்கள் சில பாடங்களை கற்றுக்கொண்டோம் எனவும் தெரிவித்தார்.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…