நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் டாஸ்க்கு முன் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு தனது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். இந்த ஜெர்சி கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டெண்டுல்கர் அணிந்திருந்தது.
ஜெர்சியுடன், டெண்டுல்கர் கோலிக்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தார். அதைப் படித்த பிறகு விராட் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இந்தியாவின் இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களின் சந்தித்த இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…