பாகிஸ்தானில் அவர் இருந்தா என்ன? இந்திய பேட்ஸ்மேன்கள் பாத்துப்பாங்க – கங்குலி!

Published by
பால முருகன்

ஆசியகிரிக்கெட் 2023 கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகிறது. அந்த போட்டியை காண தான் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துள்ளனர். போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையில், பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி இந்திய அணியின் பேட்ஸ் மேன்களுக்கு சவாலாக அமைவார் என்றும், அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய வீரர்களுக்கு சற்று சிரமாக இருக்கும் எனவும் ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்றாலும், அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் இருக்கிறார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய கங்குலி ” சர்வதேச கிரிக்கெட்டில் ஷஹீன் அப்ரிடி  ஒரு சிறந்த பந்து வீச்சாளர். ஆனால், அதற்காக எல்லா போட்டியிலும்  அவரால் சிறப்பாக பந்துவீசிட முடியாது. அவரைப்போலவே ஒவ்வொரு அணியிலும் இதுபோன்ற இரண்டு பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், பாட்கம்மின்ஸ் உள்ளனர். அவர்களை போல வீரர்களை அருமையாக எதிர்கொண்டு விளையாடுவதற்கு இந்தியாவிடம் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்’. என பாகிஸ்தானில் அவர் இருந்தா என்ன? இந்திய பேட்ஸ்மேன்கள் பாத்துப்பாங்க என்பது போல கூறினார்.

எனவே, அதைப்போல ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சையும் எதிர்கொள்ள இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்” என கங்குலி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய கங்குலி கடந்த காலத்தில் இந்திய அணி எப்படி இருந்தது என்பது குறித்தும் பேசினார். இது குறித்தும் பேசிய அவர் ” கடந்த காலத்தில் நாங்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தோம், அந்த சமயம் எல்லாம் தொடர்ச்சியாக வெற்றி பெறத் தொடங்கியிருந்தோம். எங்களிடம் சில அற்புதமான வீரர்கள் இருந்தனர். எனவே புதிய புதிய வீரர்களை மாற்றாமல் ஒரே வீரர்களை வைத்து தான் வெற்றிபெற்றோம் ” எனவும் கங்குலி தெரிவித்துள்ளார்

Published by
பால முருகன்

Recent Posts

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

15 minutes ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

37 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

1 hour ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

1 hour ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

2 hours ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago