டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு? யார் யார் இடம்பெற வாய்ப்பு?

Published by
பாலா கலியமூர்த்தி

T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி மே 1ம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிந்த உடனே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. அதன்படி, ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்களை அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்திருந்தது. இதனால் ஒவ்வொரு அணியாக தங்களது வீரர்களை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை மே 1ம் தேதி பிசிசிஐ அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் எந்த வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த சூழலில் அதுதொடர்பான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே ஒரு மாற்று வீரராக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் சுப்மன் கில், ரியான் பராக் ஆகியோரும் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது.

இவர்கள் தவிர கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ரிங்கு சிங், ரவி பிஸ்னாய் ஆகியோரும் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இந்திய அணியில் யார் யார் இடம்பெற்றுள்ளார்கள் என்பது தெரியவரும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

2 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

3 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

3 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

4 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

5 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

5 hours ago