WorldCup Cricket 2023 [Image source : ICC]
இந்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையில் இந்த தொடர் இந்தியாவில் சென்னை , டெல்லி, அகமதாபாத், மும்பை உட்பட பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை பற்றிய விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்திற்கான கிரிக்கெட் போட்டிகள் BookMyShow இணையத்தள பக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளன. இந்தியாவைத் தவிர அனைத்து அணிகளின் பயிற்சி ஆட்டத்திற்கான விற்பனை ஆகஸ்ட் 25 முதல் தொடங்கும் எனவும், ஆகஸ்ட் 30 முதல், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் இந்தியா விளையாடும் பயிற்சி விளையாட்டுகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் விளையாட்டை தவிர மற்ற போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 1ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. அதே போல, செப்டம்பர் 3ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கவுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆன்லைனில் முன்னதாக ஆகஸ்ட் 15 முதலே ஆர்முள்ளவர்கள் விண்ணப்பிக்க கோரப்பட்டு இருந்தது.அதன்படி பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. ஒரு நபர் 4 டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும்.
கூரியர் மூலம் டிக்கெட் வேண்டும் என முன்பதிவு செய்வோருக்கு டிக்கெட் கட்டணத்தில் இருந்து கூடுதலாக 140 ரூபாய் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…