மழை காரணமாக போட்டி தாமதமாகும் என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2-ஆம் நாள் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 3-ஆம் நாள் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். நியூஸிலாந்து அணியில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டை பறித்தார். அதன்பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி 3-ஆம்நாள் ஆட்ட முடிவில் 101/2 எடுத்து இருந்தனர்.
நேற்று 4 வது நாள் ஆட்டம் மோசமான வானிலை காரணமாக முதல் அமர்வு தாமதமானது. பின்னர் முழு ஆட்டமும் நிறுத்தப்பட்டது. இன்றைய 5-வது நாள் ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறுமா..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், மழை காரணமாக போட்டி தாமதமாகும் என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இன்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை அதாவது இந்திய நேரப்படி 1 மணி முதல் மாலை 4 மணி வரை மழை காரணமாக 5 ஆம் நாள் போட்டி பாதிக்கப்படக்கூடும் என உள்ளூர் வானிலை மையம் தகவல் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…