PrabathJayasuriya [Image Source : Twitter ]
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இலங்கை அணி வீரர் பிரபாத் ஜெயசூர்யா படைத்துள்ளார்.
இலங்கை அணி தற்போது அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி, பிரபாத் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகளின் ஆல்ஃப் வாலண்டைன் அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை (எட்டு போட்டிகள்) வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருந்தார். தற்போது அவருடைய அந்த சாதனையை பிரபாத் ஜெயசூர்யா முறியடித்துள்ளார்.
மேலும், பிரபாத் ஜெயசூர்யா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களும், அடுத்த இன்னிங்சில் தற்போதுவரை, 2 விக்கெட் என மொத்தமாக 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் இவர் இந்த உலக சாதனையை படைத்துள்ளார். இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…