அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் யூசுப் பதான்!

Published by
Surya

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான், இதுவரை 57 ஒருநாள், 22 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 38 வயதாகும் அவர், 2008 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். ஒருநாள் தொடரில் 2 சதம் மற்றும் 3 அரைசதங்கள் விளாசினார். ஒருநாள் போட்டிகளில் 33 விக்கெட்டுகளும் டி20 தொடரில் 13 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

சர்வதேச தொடர்களை தவிர, ஐபிஎல் தொடரின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தீராத இடம் பிடித்தார். ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர் என்று அழைக்கப்படும் யூசுப் பதான், 2010 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணியில் இருந்தார். அப்பொழுது மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அதிவேகமாக சதம் அடித்தோர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். மேலும், ஐபிஎல் தொடரில் 174 போட்டிகள் ஆடிய இவர், 3204 ரன்கள் மாற்றும் 42 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் யூசுப் பதான், அனைத்து வகையான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்றதும் சச்சின் டெண்டுல்கரை நான் தோளில் தூக்கிச் சுமந்து, மறக்க முடியாத தருணமென குறிப்பிட்டுள்ளார்.

Published by
Surya

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

25 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 hour ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago