ஐபிஎல் போட்டிகளுக்காக இம்மாதம் துபாய் செல்லவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், இன்று சென்னை சேபாக் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டர்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள சென்னை அணி ஆகஸ்ட் 21 -ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படவுள்ள நிலையில், சி.எஸ்.கே. அணி, இன்று முதல் 20 -ம் தேதி வரை (5 நாட்கள்) சென்னை சேபாக் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தது.
அதற்காக நேற்று தோனி, ரெய்னா, பியூஸ் சாவ்லா, தீபக் சஹர், உள்ளிட்ட வீரர்கள் நேற்று சென்னைக்கு வந்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்த நிலையில், இன்று முதல் பயிற்சியை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்காரணமாக, பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி தலைமையில் இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தோனி, ரெய்னா உட்பட 15 வீரர்கள், முதல் நாள் பயிற்சி ஆட்டத்தை தொடங்கினார்கள். இதனால் போட்டி தொடங்குவது குறித்த ஆர்வம், ரசிகர்களிடையே நிரம்பி வழிகிறது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…