மைதானத்தின் நடுவில் அழ ஆரம்பித்த டேவிட் வார்னர்?

Published by
murugan

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.  சிட்னியில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, டேவிட் வார்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடு மைதானத்தில் அழுது விட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு  டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டேவிட் வார்னரின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சிட்னியில் விளையாடிய டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுது.  மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது. டேவிட் வார்னரை இனி ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்க்க முடியாது.

சிட்னியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குப் பிறகு, வர்ணனையாளர்கள் டேவிட் வார்னரை நேர்காணலில் பேச  அழைத்தபோது,  ​​​​அவர் ஏதாவது சொல்ல வந்தபோது, அவர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தின் நடுவில் அழுது விட்டார். பின்னர் ​​கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்த டேவிட் வார்னர், திடீரென அங்கிருந்து திரும்பி சக வீரர்களிடம் சென்றார். இதைத்தொடர்ந்து,  மைதானத்தில் தனது மனைவியைக் கட்டிப்பிடித்து டேவிட் வார்னர் உணர்ச்சிவசப்பட்டார் இது தொடர்பான பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recent Posts

நீலகிரியில் வெளுத்து ஊத்தும் கனமழை! இந்த இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும்…

5 minutes ago

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

12 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

12 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

12 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

13 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

14 hours ago