இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டார் ஸ்போர்ட்க்கு பேட்டி ஒன்று அளித்த அவர் பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக தோனியின் ஓய்வு பற்றியும் கூறினார். அதாவது, அது குறித்து பேசிய அவர், ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் தெரிவித்தார். பின்னர் தேர்வு குழு உறுப்பினர் வேலைக்கு அப்பாற்பட்டு சொல்ல வேண்டும் என்றால் நான் மற்றவர்களைவிட தோனியின் தீவிர ரசிகன் என்றும், அவர் ஒரு கேப்டனாக அனைத்து சாதனைகளையும் செய்துவிட்டார்.
அதில் இரண்டு உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, இந்தியாவை டெஸ்ட் பட்டியலில் முதல் இடத்துக்கு கொண்டு வந்தது, இதையெல்லாம் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய எம்.எஸ்.கே. பிரசாத், அவருடைய முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். தேர்வு குழுவராக நாங்கள் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதைத்தான் நாங்கள் இப்போது செய்து இருக்கிறோம் என குறிப்பிட்டார். தொடர்ந்து ரோஹித் சர்மா பற்றியும் பேசிய அவர், இப்போது டெஸ்ட், ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டி என அனைத்து போட்டியிலும் அசத்தும் வீராக உருவாகியுள்ளார். இது எங்களுக்கே ஆசிரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என தெரிவித்தார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…