போலி பாஸ்போர்ட் விவகாரம்! ஜாமீன் பெற்றார் ரொனால்டினோ

கால்பந்து வீரரான ரொனால்டினோ கடந்த 2015 ஆம் ஆண்டு போட்டிகளில் ஓய்வு பெற்றார்.சமீபத்தில் ரொனால்டினோ தனது சகோதரர் உடன் பராகுவே நாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.அந்த சமயத்தில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையின்போது ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது.
எனவே ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. பின்னர் பிணைத்தொகையாக இருவரும் தலா தலா 8 லட்சம் டாலர் கட்டி ஜாமீன் பெற்றுள்ளனர்.மேலும் இருவரும் விசாரணை முடியும் வரை வீட்டிக்காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025