போலி பாஸ்போர்ட் விவகாரம்! ஜாமீன் பெற்றார் ரொனால்டினோ

கால்பந்து வீரரான ரொனால்டினோ கடந்த 2015 ஆம் ஆண்டு போட்டிகளில் ஓய்வு பெற்றார்.சமீபத்தில் ரொனால்டினோ தனது சகோதரர் உடன் பராகுவே நாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.அந்த சமயத்தில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையின்போது ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது.
எனவே ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. பின்னர் பிணைத்தொகையாக இருவரும் தலா தலா 8 லட்சம் டாலர் கட்டி ஜாமீன் பெற்றுள்ளனர்.மேலும் இருவரும் விசாரணை முடியும் வரை வீட்டிக்காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025