Sanath Jayasuriya as the full- time Cricket Consultant [Image Source : X/@OfficialSLC]
இலங்கையின் அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்தது.
இதன்பின், விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால குழு அமைக்கப்பட்டது. ஆனால், அரசியல் தலையீடு இருப்பதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது.
டெஸ்ட் போட்டியில் விளையாட மேக்ஸ்வெல்லுக்கு தகுதி இல்லை… ரிக்கி பாண்டிங்!
இதையடுத்து, இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கா இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவை புதிதாக அமைக்கப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவை இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்து அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வீரர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்சியளிக்கும் நபர்கள் அனைவருக்கும் ஆலோசனைகளை வழங்கி அவர்கள் சிறப்பாக செயல்பட உதவும் பொறுப்பு ஜெயசுர்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்ட்டுள்ளது. 1996ம் ஆண்டு சொந்த மண்ணில் இலங்கைக்கு ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றெடுப்பதில் ஜெயசூர்யா முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…