[Image Source:X/@CricCrazyJohns]
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 14வது தங்கப் பதக்கம் இதுவாகும். 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டின் அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடந்து வருகிறது.
சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடந்து வரும் நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி தங்கம் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 5,000 மீ ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 15:14.75 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் பதக்கம் வென்று அசத்தினார். ஸ்டீபிள் சேஸில் நேற்று பாருல் சவுத்ரி வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், இன்று 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
அதாவது, 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் நேற்று இந்தியா 2 பதக்கங்களை வென்றது. அதன்படி, இந்தியாவின் பரூல் சவுத்ரி வெள்ளியும், ப்ரீத்தி லம்பா வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதில், பரூல் சவுத்ரி 9:27.63 நிமிடத்தில் இலக்கை எட்டி வெள்ளி பதக்கம் வென்றார். ப்ரீத்தி லம்பா 9:43.32 நிமிடத்தில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார். எனவே, ஆசிய விளையாட்டு தொடரில் இதுவரை 14 தங்கம், 24 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…