பெரும் சோகம்…பிரபல கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் ஆண் குழந்தை மரணம்!

Published by
Edison

பிரபல கால்பந்து ஜாம்பவான் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட்  அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸும் தங்கள் ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:

“எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்.எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது.எனினும்,எங்கள் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தை ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் வழங்கப்பட்ட அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்த கடினமான நேரத்தில் நாங்கள் பேரழிவிற்கு ஆளாகி தனிமையில் இருக்க விரும்புகிறோம்.எங்கள் பையன்,எங்கள் தேவதை.நாங்கள் எப்பொழுதும் உன்னை நேசிப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவுக்கும்,ஜார்ஜினா ரோட்ரிகஸும் கிறிஸ்டியானோ ஜூனியர்,மேடியோ என்ற இரு ஆண் குழந்தைகளும் மற்றும்  ஈவா மற்றும் அலனா என்ற இரு பெண் குழந்தைகளும் என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர்.மேலும்,அவர் மனைவி மீண்டும் கற்பமானதையடுத்து,இரட்டை குழந்தை பிறக்கப்போவதை உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில்,பெண் குழந்தை மட்டுமே உயிருடன் பிறந்தது என்றும் ஆண் குழந்தை உயிரிழந்து அந்த இழப்பை சமாளிக்கும் வலிமையை மட்டுமே அளித்துள்ளது என்றும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…

13 minutes ago

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

32 minutes ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…

48 minutes ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

1 hour ago

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…

2 hours ago

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago