இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் உ.பி அணிகள் இந்துாரில் மோதின. முதல் இன்னிங்சில் ம.பி அணி 230 ரன்கள் எடுத்தது, உ.பியை சேர்ந்த ரவி யாதவ், ம.பி அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். இவர், தனது முதல் ஓவரில் 3,4,5-வது பந்தில் ஆர்யன், அன்கித், சமீரை அவுட்டாக்கி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். உ.பி அணி முதல் இன்னிங்சில் 216 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது நாள் முடிவில் ம.பி. அணி இரண்டாவது இன்னிங்சில் 105/3 ரன்கள் எடுத்து 119 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து முதல் தர அறிமுக போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என உலக சாதனை படைத்தார் ரவி யாதவ். இதற்கு முன் இந்தியாவின் ஸ்ரீநாத், சலில் அங்கோலா, அபிமன்யு மிதுன் உள்ளிட்ட 7 இந்திய வீரர்கள் அறிமுக போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினர். சர்வதேச அளவில் தென் ஆப்ரிக்காவின் ரிக்கி பிளிப், 1939-40ல் முதல் 3 போட்டியில் பவுலிங் செய்யவில்லை. 4-வது போட்டியில் முதன் முறையாக பந்து வீசிய ஓவரில் இதுபோல சாதித்தார். மற்றபடி, அறிமுக போட்டியில், முதல் ஓவரில் அசத்தியது ரவி யாதவ் மட்டும் தான் என குறிப்பிடப்படுகிறது.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…