தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து இந்திய அணி உடன் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி20 தர்மாசலாவில் நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் போட்டி கைவிடப்பட்டது.
இரண்டாவது போட்டி மொஹாலியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து இன்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் இந்திய வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.இந்நிலையில் இரண்டாவது போட்டியில் கேப்டன் கோலி 72 ரன்கள் அடித்து டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்த ரோஹித் சாதனையை முறியடித்தார்.தற்போது கோலி 2441 ரன்னும் , ரோஹித் 2434 ரன்னுடன் உள்ளனர்.
இன்றைய போட்டியில் 6 ரன்கள் அடித்து கோலியின் சாதனையை முறியடித்து ரோஹித் பதிலடி கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 6 ரன்கள் எடுத்தால் மீண்டும் முதலிடத்தை ரோஹித் பிடிப்பார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…