MSD and RAINA [Image Source : twitter/@ChennaiIP]
ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு, மேலும் ஓராண்டு விளையாடுவேன் என தோனி கூறியதாக ரெய்னா தெரிவித்துள்ளார்.
தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருடைய ஆட்டத்திற்காகவே பல ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்பி பார்த்து வருகிறார்கள். ஆனாலும் ஒவ்வொரு ரசிகர்களின் மனதிற்குள் ஒரு பயம் கலந்த வேதனைக்குரிய கேள்வி எழுப்பும் விஷயம் என்னவென்றால், இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல் ஆக இருக்கப்போகிறதா..? என்று தான்.
இது குறித்து தோனியிடம் கேட்டாலும் கூட தனது திட்டங்கள் குறித்து தெளிவான பதிலை அளிக்க மறுத்து வருகிறார். இந்த நிலையில், முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே அணி வீரரான சுரேஷ் ரெய்னா தோனி தன்னிடம் ஓய்வு பெறுவது குறித்து பற்றிய பேசிய ரகசிய தகவலை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
ஊடகத்திற்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா ” கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் தோனியை சந்தித்தேன். அவரிடம் நான் ஓய்வு பற்றி கேட்டேன். அதற்கு அவர் கோப்பையை வென்ற பிறகு, இன்னும் ஒரு வருடம் விளையாடுவேன் என உறுதியாக கூறினார்” என்று ரெய்னா கூறியுள்ளார். மேலும் பேசிய ரெய்னா “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடிவருகிறது என்றும் கூறியுள்ளார்.
ரெய்னாவிடம் தோனி கூறிய வார்த்தைகள் அனைத்தும் ஐபிஎல்லின் மற்றொரு சீசனில் விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…