இந்தியாவுக்கு இந்த நடுவர் ராசியில்லாதவர்… ‘6 முறை தோல்வி’ கோபத்தில் ரசிகர்கள்..!

Published by
murugan

2023 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில்ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்க்கப்பட்டு  ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி உலக சாம்பியன் ஆனது.

தோல்விக்கு நடுவர் ரிச்சர்ட் கேட்டில்பரோ காரணம்:

இந்திய அணியின் தோல்விக்கு நடுவர் ரிச்சர்ட் கேட்டில்பரோ காரணம் என ரசிகர் ட்ரோல் செய்து வருகின்றனர். இறுதிப் போட்டியில் கெட்டில்பரோவின் சில முடிவுகள் இந்தியாவுக்கு ஆபத்தாக முடிந்தது. இறுதிப்போட்டியில் மார்னஸ் லாபுஷாக்னேவுக்கு எதிரான எல்பிடபிள்யூ- விற்கு அவுட் இல்லை என தெரிவித்தார். உடனே இந்திய அணி  ரிவ்யூ செய்தது. ஆனால் அது நடுவரின் அழைப்பாக (umpiers call ) மாறியது.

அந்த நேரத்தில்  மார்னஸ்-க்கு அவுட் கொடுத்திருந்தால் இந்தியா வெற்றி கிடைத்திருக்கும் என ரசிகர்கள் தெரிவித்தனர். ரிச்சர்ட் கேட்டில்பரோ பெரிய போட்டிகளில் நடுவராக இருக்கும் போதெல்லாம் இந்தியாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்ததாக ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்தியாவின் தோல்விக்கும் நடுவர் ரிச்சர்ட்டுக்கும் இடையேயான தொடர்பு:

கடந்த 2014 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 2015 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 2016 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் இந்திய அணி தோற்கடிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி 2017 இல், இந்திய அணி அற்புதமாக விளையாடியது. இறுதிப் போட்டியை எட்டியது ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக தோல்வியடைந்தது. பின்னர் 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்துள்ளது. இந்திய அணி தோல்வியடைந்த இந்த அனைத்துபோட்டியிலும் ஆன்-பீல்ட் அம்பயராக ரிச்சர்ட் கெட்டில்பரோ இருந்து உள்ளார். இதனால் ரிச்சர்ட் கெட்டில்பரோ நடுவராக இருக்கும்போது இந்திய அணி ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. நடுவர் ரிச்சர்ட் கெட்டில் ராசியில்லாத நடுவர் என  இந்திய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் தோல்விக்கும் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவுக்கும் இடையேயான தொடர்பு 2014 ஆம் ஆண்டில் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. இதில் குறிப்பாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் தோனி ரன் அவுட்டான போது ரிச்சர்ட் கெட்டில்பரோ கொடுத்த ரியாக்‌ஷன் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும்.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

37 minutes ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

3 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

3 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

4 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

4 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

6 hours ago