இந்தியாவுக்கு இந்த நடுவர் ராசியில்லாதவர்… ‘6 முறை தோல்வி’ கோபத்தில் ரசிகர்கள்..!

Published by
murugan

2023 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில்ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்க்கப்பட்டு  ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி உலக சாம்பியன் ஆனது.

தோல்விக்கு நடுவர் ரிச்சர்ட் கேட்டில்பரோ காரணம்:

இந்திய அணியின் தோல்விக்கு நடுவர் ரிச்சர்ட் கேட்டில்பரோ காரணம் என ரசிகர் ட்ரோல் செய்து வருகின்றனர். இறுதிப் போட்டியில் கெட்டில்பரோவின் சில முடிவுகள் இந்தியாவுக்கு ஆபத்தாக முடிந்தது. இறுதிப்போட்டியில் மார்னஸ் லாபுஷாக்னேவுக்கு எதிரான எல்பிடபிள்யூ- விற்கு அவுட் இல்லை என தெரிவித்தார். உடனே இந்திய அணி  ரிவ்யூ செய்தது. ஆனால் அது நடுவரின் அழைப்பாக (umpiers call ) மாறியது.

அந்த நேரத்தில்  மார்னஸ்-க்கு அவுட் கொடுத்திருந்தால் இந்தியா வெற்றி கிடைத்திருக்கும் என ரசிகர்கள் தெரிவித்தனர். ரிச்சர்ட் கேட்டில்பரோ பெரிய போட்டிகளில் நடுவராக இருக்கும் போதெல்லாம் இந்தியாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்ததாக ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்தியாவின் தோல்விக்கும் நடுவர் ரிச்சர்ட்டுக்கும் இடையேயான தொடர்பு:

கடந்த 2014 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 2015 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 2016 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் இந்திய அணி தோற்கடிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி 2017 இல், இந்திய அணி அற்புதமாக விளையாடியது. இறுதிப் போட்டியை எட்டியது ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக தோல்வியடைந்தது. பின்னர் 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்துள்ளது. இந்திய அணி தோல்வியடைந்த இந்த அனைத்துபோட்டியிலும் ஆன்-பீல்ட் அம்பயராக ரிச்சர்ட் கெட்டில்பரோ இருந்து உள்ளார். இதனால் ரிச்சர்ட் கெட்டில்பரோ நடுவராக இருக்கும்போது இந்திய அணி ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. நடுவர் ரிச்சர்ட் கெட்டில் ராசியில்லாத நடுவர் என  இந்திய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் தோல்விக்கும் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவுக்கும் இடையேயான தொடர்பு 2014 ஆம் ஆண்டில் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. இதில் குறிப்பாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் தோனி ரன் அவுட்டான போது ரிச்சர்ட் கெட்டில்பரோ கொடுத்த ரியாக்‌ஷன் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும்.

Published by
murugan

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

5 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

6 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

6 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

7 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

7 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

8 hours ago