முக்கியச் செய்திகள்

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.! கத்தாரிடம் இந்தியா தோல்வி.!

Published by
செந்தில்குமார்

2026ம் ஆண்டுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 36 அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட்-ராபின் முறைப்படி போட்டியிட்டு வருகின்றன. அதன்படி, இந்திய அணி, கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இதில் சுனில் சேத்ரி தலைமையாலான இந்திய அணி, உலக தரவரிசையில் 61வது இடத்தில் உள்ள கத்தாரை நேற்று (செவ்வாய்க் கிழமை) எதிர்கொண்டது. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி, இந்தியா அணிக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை.

தொடக்கம் முதலே கத்தார் அணியின் கையில் போட்டி இருந்தது. இந்திய அணி திட்டமிட்டபடி வலுவானத் தொடக்கம் அமையவில்லை. தொடர்ந்து ஆட்டம் சென்றுகொண்டிருக்கையில், முஸ்தபா தரேக் மஷால் 4 வது நிமிடத்தில் கத்தார் அணிக்காக ஒரு கோல் அடித்தார். கோலைத் தடுக்க இந்திய அணி முயற்சி செய்தும் அது முடியவில்லை.

அதன்பிறகு அல்மோஸ் அலி 47வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 0-2 என்ற கணக்கில் இருந்தது. போட்டி முடியும் கட்டத்தில் 86வது நிமிடத்தில் யூசுப் அப்துரிசாக் கோல் அடித்த நிலையில் போட்டி 0 – 3 என்ற கணக்கில் முடிந்தது. இதனால் உலகக் கோப்பை கால்பந்து இரண்டாவது தகுதிச் சுற்றில் கத்தார் வெற்றி பெற்றது.

இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கத்தார் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்தியா தோல்வியுற்றதால் 2வது இடத்திலிருந்து 3 வது இடத்திற்கு சென்றது. முன்னதாக குவைத் அணியுடன் மோதி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

INDvsENG :3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி! இந்தியா தோல்விக்கான முக்கிய காரணங்கள்!

லண்டன் : 2025 ஜூலை 10 முதல் 14 வரை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட்…

13 minutes ago

இன்று, நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

37 minutes ago

பூமிக்கு புறப்பட்டது சுபன்ஷு சுக்லா குழு! இன்று பசிபிக் கடலில் விண்கலம் தரையிறங்கும்!

2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள்,…

1 hour ago

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

10 hours ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

11 hours ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

11 hours ago