இந்தியாவுக்கு மற்றொரு பெருமை….உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பிரியா மாலிக்…!

Published by
Edison

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின்,73 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமான நிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியதில் இருந்து,பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.

வெள்ளிப் பதக்கம்:

அதன்படி,நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.இது, ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியா பெற்ற முதல் வெள்ளிப்பதக்கம் ஆகும்.மேலும்,தற்போது நடைபெற்று வரும் போட்டியில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கமாகும்.இதன்மூலம்,மீராபாய் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்தார்.

பிரியா மாலிக் சாதனை:

இந்நிலையில்,ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின்,73 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பிரியா மாலிக் ,பெலாரஸ் நாட்டின் க்சேனியா படபோவிச்சை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று,மல்யுத்தத்தில் தனது பலத்தை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார்.

இதனால்,பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்து:

அந்த வகையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,”73 கிலோ உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற பிரியா மாலிக்கிற்கு எனது வாழ்த்துக்கள்.என் இதயம் முழுவதும் இந்த பெருமையால் நிறைந்துள்ளது.

நம் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த வாழ்த்துக்கள். நீங்கள் தொடர்ந்து பிரகாசிப்பீர்கள்”,என்று ட்வீட் செய்துள்ளார்.

தங்கப் பெண்:

பிரியா மாலிக் ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் சவுத்ரி பாரத் சிங் நினைவு விளையாட்டுப் பள்ளி நிதானி (சிபிஎஸ்எம் விளையாட்டுப் பள்ளி நிதானி) மாணவி. பிரியாவின் தந்தை ஜெய் பகவான் நிதானி இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்.

பிரியா மாலிக் தங்கப்பதக்கம் வென்றது புதிய சாதனையல்ல, ஏனெனில் அவர் தொடர்ந்து தங்கத்தை அடித்து வருகிறார்.2019 ஆம் ஆண்டு புனேவில் நடந்த  மல்யுத்த போட்டியில் பிரியா மாலிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதனால்,பிரியா மாலிக் வெற்றியில்,அவரது பயிற்சியாளர் அன்ஷு மாலிக்குக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் உண்டு.2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பிரியா தங்கம் வென்றார். இது தவிர, கடந்த ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற தேசிய கேடட் மல்யுத்த போட்டியிலும் தங்கப்பதக்கத்தையும் வென்று  “தங்கப் பெண்ணாக” உள்ளார் எனினும்,ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதே பிரியா மாலிக்கின் கனவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

17 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

18 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

19 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

19 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

21 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

22 hours ago