இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி பந்து வீச்சில் சொதப்பியதால் இதன் விளைவாக கேப்டன் பொல்லார்ட் மற்றும் பூரன் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
பூரன் சதம் விளாசி விடுவார் என எதிர்ப்பத நிலையில் 89 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் கேப்டன் பொல்லார்ட் பொறுப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் அடித்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் சைனி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக ரோஹித் ,கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விலையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இவர்கள் இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை சதத்தை தாண்டியது. சிறப்பாக விளையாடிய ரோஹித் 63 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.பின்னர் அடுத்த சில ஓவர்களில் கே.எல் ராகுல் 77 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் கோலி களமிறங்க இதை தொடர்ந்து இறங்கிய ஸ்ரேயாஸ், ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.பின்னர் மத்தியில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா ,கோலி இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய கோலி அரைசதம் அடித்தார்.
கோலி அதிரடி ஆட்டத்தால் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் கோலி 85 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி பரிதாபமான நிலையில் இருந்த போது ஜடேஜா, மற்றும் சர்துல் தாக்கூர் இருவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற செய்தனர்.
இறுதியாக இந்திய அணி 48.4 ஓவர் முடிவில் 316 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…