இரவு முழுவதும் தீவிர பயிற்சி ..! வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி !!

Published by
அகில் R

பாரிஸ் : உலக நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் தொடரான ஒலிம்பிக் தொடரானது தற்போது பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மகளீருக்கான 50 கி எடை பிரிவில் இந்திய அணியின் சார்பாக வினேஷ் போகத் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.

இவர் நேற்று 50 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் காலிறுதி சுற்றில் ஜப்பானை சேர்ந்த வீராங்கணையான யுய் சுசாகியையும், அடுத்து அரையிறுதியில் கியூபாவின் யுஸ்னிலிஸ் குஸ்மானையும் தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். இந்தியாவிற்கு இந்த ஒலிம்பிக்கில் இதுவரை 3 வெண்கல பதக்கம் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், இன்றைய நாள் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியாக கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், இன்றைய நாளில் இறுதி போட்டியில் கலந்து கொள்வதற்கான உடற்தகுதி சோதனையில் 100 கிராம் அதிகம் உள்ளதன் காரணமாக ஒலிம்பிக் கமிட்டி அவரை தகுதி நீக்கம் செய்தது. இதனால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த அமெரிக்க வீராங்கணை சாராவிற்கு தங்க பதக்கம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பல கோடி இந்தியர்களின் பதக்க கனவும் நொறுங்கி இருக்கிறது. மேலும், இந்த இறுதி போட்டிக்காக தனது உடல் எடையை குறைப்பதற்காகவே நேற்று இரவு முழுவதும் விடாமல் உடற்பயிற்சிகள் செய்து 1.80 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

தற்போது, நீர்சத்து குறைபாடு மற்றும் இரவு முழுவதும் விடாமல் பயிற்சி என  உடல் கோளாறு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் வினேஷ் போகத். தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் மல்யுத்த போட்டிகளில் அவர் சந்தித்த அளவிற்கு துன்பங்கள் எந்த வீரர் மற்றும் வீராங்கனைகளும் சந்தித்திருப்பது சந்தேகம் தான்.

தற்போது, பல இன்னல்களை தாண்டி இறுதி போட்டியில் நுழைந்த போதும் கூட உடல் எடை கூடியதன் காரணமாக இறுதி கட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் வினேஷ் போகத். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவால் எந்த ஒரு மேல்முறையீடும் செய்ய முடியாதென்று தகவலும் வெளியாகி உள்ளது. இது கோடி கணக்கான இந்தியர்களின் இதயங்களையும் நொறுக்கி இருக்கிறது என்றே கூறலாம்.

Published by
அகில் R

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

36 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

55 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago