ISL 2020-21: இன்று தொடங்குகிறது ஐஎஸ்எல் கால்பந்து லீக்.. தீவிர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Published by
Surya

ஐஎஸ்எல் கால்பந்து லீக் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் ஏடிகே மோகன் பகான் – கேரளா பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதாக நடப்பது, ஐஎஸ்எல் கால்பந்து தொடர். 2020 – 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், இன்று கோவாவில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஏடிகே மோகன் பகான் – கேரளா பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா பரவல் காரணமாக கோவாவில் உள்ள ஜவாஹா்லால் நேரு மைதானம், பாம்போலிம்மில் உள்ள ஜிஎம்சி மைதானம், வாஸ்கோவில் உள்ள திலக் மைதானம் ஆகிய 3 இடங்களில் நடைபெறவுள்ளன.

ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு:

இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டிகளை மைதானத்தில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திலும் காணலாம். நடப்பாண்டில் 115 போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும், இம்முறை 11 அணிகள் விளையாடவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஜனவரி 11-ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணை வெளியானது.

11 அணிகள்:

இந்தாண்டு புதிதாக SC ஈஸ்ட பெங்கால் என ஒரு அணி கலந்துகொள்ளவுள்ளது. எப்.சி. கோவா, ஏ.டி.கே. மோகன் பகான், பெங்களூா் எப்.சி., ஜாம்ஷெட்பூா் எப்.சி., சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி., ஒடிஸா எப்.சி., நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி., கேரளா பிளாஸ்டா்ஸ், ஹைதராபாத் எப்.சி. என மொத்தம் 11 அணிகள் விளையாடவுள்ளது.

சென்னையின் எப்.சி.:

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முன்னணி அணியாக இருப்பது, சென்னையின் எப்.சி. அணி 2015, 2017 என இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. சென்னை அணியில் தலைமை பயிற்சியாளரான கிரகோரி மாற்றப்பட்டு, அவருக்கு பதில் புதிதாக ஓவன் கோயல் நியமிக்கப்பட்ட நியமிக்கப்பட்டார். இதனால் அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றிபெற்று, கொல்கத்தா, கோவா, பெங்களூர் ஆகிய பெரிய அணிகளை லீக் தொடரில் ஓடவிட்டது. நடப்பாண்டில் சென்னை அணி, நவம்பர் 24, 29, டிசம்பர் 4, 9, 13, 19, 26, 29, ஜனவரி 4, 10 ஆகிய தேதிகளில் விளையாடவுள்ளதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியை காண ரசிகர்கள் தீவிரமடைந்துள்ளனர்.

Published by
Surya

Recent Posts

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

4 minutes ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

10 minutes ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

36 minutes ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

37 minutes ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

54 minutes ago

”எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும்” – அதிபர் டிரம்ப் புலம்பல்.!

வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…

2 hours ago