இது தோனியின் சீட்.! இதில் நாங்கள் யாரும் அமர மாட்டோம்.! வைரலாகும் வீடியோ.!

Published by
murugan
  • இந்திய வீரர் சாஹல் நேற்று வீரர்கள் வரும் பேருந்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியிட்டார்.
  • அந்த வீடீயோவில் பேருந்தின் கடைசி இருக்கைக்கு அருகில் அமர்ந்து , இது தோனியின் சீட். இதில் நாங்கள் யாரும் அமர மாட்டோம். இந்த இடம் அவருக்குரியது அவரை நாங்கள் மிஸ் பன்றோம் என கூறினார்.

தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர்.இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளும் ஆக்லாந்தில் நடைபெற்றது.

விளையாடிய இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றியை பதிவு செய்து உள்ளது.இன்று  மூன்றாவது டி 20 போட்டியில் ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்திய வீரர் சாஹல் நேற்று வீரர்கள் வரும் பேருந்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியிட்டார்.

அந்த வீடீயோவை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.அந்த வீடீயோவில் இந்திய வீரர்கள் பேருந்தில் செல்லும் போது சாஹல் ஒவ்வொரு வீரரிடமும் சென்று பேசிக் கொண்டே வருகிறார். இறுதியில் பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்று இது தோனியின் சீட். இதில் நாங்கள் யாரும் அமர மாட்டோம். இந்த இடம் அவருக்குரியது அவரை நாங்கள் மிஸ் பன்றோம் என கூறினார்.இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ இங்க பார்க்க..

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதி தோல்வியை தழுவி வெளியேறியது. உலகக்கோப்பை போட்டி முடிந்த தோனி ஓய்வு பற்றிய பேச்சுக்கள் தொடங்கியது.

உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் எந்தவித தொடரிலும் தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியானது.அதற்கேற்ப தோனியும் ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறி மேற்கிந்தியத்தீவுகள் விளையாடாமல்  ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின்னர் இந்திய அணி விளையாடிய இந்த வித தொடர்களிலும் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான வீரர்களின் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலிலும் தோனி பெயர் இல்லை. இதனால் தோனி இனிமேல் இந்திய அணியில் விளையாடுவாரா..? என்ற கேள்வி  ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

 

Published by
murugan

Recent Posts

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…

44 minutes ago

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

2 hours ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

3 hours ago

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

3 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

4 hours ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

5 hours ago