நேற்று இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே முதலாவது டி 20 போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 20 வரை முடிவில் 207 ரன்கள் அடித்தனர்.இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டை இழந்து 18.4 ஓவர் 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்தில் 94 ரன்கள் குவித்துகடைசிவரை களத்தில் நின்றார்.அதில் 6 பவுண்டரி , 6 சிக்சர்கள் அடங்கும்.
போட்டியின்போது விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் ஓவரை வெளுத்து வாங்கினார். அப்போது ஜேம்ஸ் வில்லியம்ஸ் வீசிய பந்தை பவுண்டரி அடித்த பிறகு கோலி , ஜேம்ஸ் வில்லியம்ஸ் கொண்டாடும் “நோட்புக் ஸ்டைலில்” கொண்டாடினார்.
கடந்த 2017-ம் ஆண்டு விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய பின் வில்லியம்ஸ் நோட்புக் ஸ்டைலில் அவரை வழியனுப்பி வைத்தார். தற்போது கோலி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து போட்டி முடிந்த பின் கோலியிடம் கேள்வி எழுப்பியபோது , ஜமைக்காவில் நடைபெற்ற போட்டியின்போது எனக்கு நோட்புக் ஸ்டைல் மூலம் வழி அனுப்பி வைத்தனர்.
அதனால் இன்று நான் அதை செய்ய வேண்டும் நினைத்தேன் எனக்கூறினார். ஆட்டம் முடிந்த பிறகு நாங்கள் அனைவரும் புன்னகையுடன் கை கொடுத்தோம் . இதுதான் கிரிக்கெட். களத்தில் கடினமாக விளையாடினாலும் எதிரணிக்கு எப்போது மதிப்பு உண்டு என கூறினார்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…