இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை போல மேற்கிந்திய தீவுகளில் சி.பி.எல் எனப்படும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் CPL-லில் விளையாடி வரும் st Lucia Zouks அணியை வாங்கியுள்ளது. இந்த அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் டேரன் ஷமி கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவரான மோகித் பர்மான் கூறுகையில், உலகின் சிறந்த தொடர்களில் முதலீடு செய்ய ஆவலாக இருப்பதாகவும், சி.பி.எல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்குமுன் கடந்த 2015ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் சி.பி.எல்லில் இதுவரை மூன்று முறை கோப்பையை வென்றுள்ள (Trinidad and Tobago Red Steel) என்ற அணியை வாங்கியது. அந்த அணி தற்போது Trinbago Knight Riders எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் வாங்கியுள்ள st Lucia Zouks அணியின் உடை மற்றும் பெயர் குறித்த அறிவிப்பு பிசிசிஐயின் அனுமதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…