IndVsSA: பந்துவீச்சில் வெறித்தனம் காட்டிய சிராஜ்! ஆல்-அவுட் ஆன தென்னாப்பிரிக்கா

Published by
பால முருகன்

தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று (ஜனவரி3) இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை கொடுத்து தடுமாறி விளையாடி வந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 2, டீன் எல்கர் 4, ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட் இழந்தார்கள்.

அவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்கிய டோனி டி ஜோர்ஜி 2, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3, ஆகியோரும்  தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்து வெளியேறினார்கள்.  டேவிட் பெடிங்ஹாம்12 , கைல் வெர்ரைன் 15 , மார்கோ ஜான்சன் 0, கேசவ் மகாராஜ் 3, ககிசோ ரபாடா 5, நந்த்ரே பர்கர் 4 என ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

23.2 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

முகமது சிராஜ் வீசிய பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா  அணி தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்தது. 9 ஓவர்கள் பந்து வீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார் ஆகியோரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

50 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

55 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago