ஒலிம்பிக் ஹாக்கி: வாழ்வா?சாவா? ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி…!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 4-3 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி,கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்திற்கு எதிரான பூல்(Pool) A முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

தொடர் தோல்வி:

அதன்பின்னர்,ஜெர்மனிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்திலும்  2-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.

இதனையடுத்து,கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி,நடப்பு சாம்பியனான கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது.போட்டியின் இறுதியில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வியுற்றது.

முதல் வெற்றி:

இவ்வாறு தொடர்ந்து 3 போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு பிறகு,இன்று  நடைபெற்ற பெண்கள் ஹாக்கி போட்டியில் அயர்லாந்து அணியை,இந்தியா 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று,தோல்வியில் இருந்து மீண்டு எழுந்தது.

வாழ்வா?-சாவா? :

இந்நிலையில்,இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி கடைசி லீக்கின் வாழ்வா?-சாவா? போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் வந்தனா கோல் அடிக்க 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்ற நிலையில்,கடைசியில் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எரின் ஹண்டர் கோல் அடிக்க 2-2 என்ற கணக்கில் மீண்டும் சமநிலையில் இருந்தன.

இதனையடுத்து,போட்டியின் இறுதியில்,தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 4-3 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.இப்போட்டியில் வந்தனா கட்டாரியா ஹாட்ரிக் கோல் அடித்தார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றதால் மட்டுமே இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.ஒருவேளை தவறும் பட்சத்தில் இந்தியா ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற வேண்டியிருந்திருக்கும்.ஆனால்,இந்திய அணி தோல்வியிலிருந்து மீண்டு வந்து பதக்கத்தை நோக்கிய பயணத்தில் முன்னேறிச் செல்கிறது.

இந்தியா XI:கோச் – ஸ்ஜேர்ட் மரிஜ்னே.

சவிதா புனியா (GK), டீப் கிரேஸ் ஏக்கா, குர்ஜித் கவுர், உதிதா, நேஹா கோயல், மோனிகா மாலிக், ராணி ராம்பால் (C), நவநீத் கவுர், வந்தனா கட்டாரியா, நவ்ஜோத் கவுர், நிஷா.

தெற்கு ஆப்பிரிக்கா XI: கோச் – ராபின் வான் ஜின்கெல்.

எரின் ஹண்டர் (c), சார்ன் மடாக்ஸ், டார்ரின் கிளாஸ்பி, குவானிடா பாப்ஸ், ஃபுமேலெலா எம்பேண்டே (GK), லிசா டீட்லெஃப்ஸ், லிலியன் டு பிளெசிஸ், கிறிஸ்டன் பாட்டன், டாரின் மல்லெட், செலியா சீரானே, மரைசன் மரைஸ்.

Published by
Edison

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

14 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

27 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago