இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது.இப்போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இலங்கை அணி இறங்கியது. தொடக்க வீரர்களாக குணதிலக , பெர்னாண்டோ இருவரும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய குணதிலக அரைசதம் அடித்து 57 ரன்கள் எடுத்தார்.அதில் 8 பவுண்டரி , 1 சிக்ஸர் அடங்கும் .பின்னர் நிதானமாக விளையாடிய பெர்னாண்டோ 33 ரன்களுடன் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ராஜபக்ஷ 32 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.பிறகு களமிறங்கிய அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 165 ரன்கள் எடுத்தது.
166 ரன்கள் இலக்குடன் இறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரராக பாபர் ஆசாம் ,
அகமது ஷெஜாத் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே பாபர் ஆசாம்13 ரன்களில் வெளியேற பின்னர் உமர் அக்மல் ரன் எடுக்காமல் வெளியேறினார்.
பிறகு களமிறங்கிய கேப்டன் சப்ராஸ் அகமது 24 ரன்களில் வெளியேற அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்.இறுதியாக பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 101 ரன்கள் மட்டும் எடுத்தது.இதனால் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நாளை இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது.
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…