டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) உலகின் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21-10, 21-23, 21-9 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மனோஜ் சர்காரை வீழ்த்தினார்.
இந்நிலையில்,தற்போது நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸ், பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு எஸ்எல் 3 போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத்,உக்ரைனின் ஒலெக்சாண்டர் சைர்கோவை 21-12, 21-9 என்ற கணக்கில் 30 நிமிடங்களுக்குள் தோற்கடித்து,அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.இதனால்,இந்தியாவுக்கு ஒரு பதக்கம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும்,பாரா பேட்மிண்டன் அரையிறுதி மற்றும் பதக்கப் போட்டிகள் செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறும்.
முன்னதாக ,இன்று காலை நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துடுப்பு படகுபோட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…