பாராலிம்பிக்ஸ் : அதிக அளவில் பதக்கத்தை குவித்து இந்தியா புதிய சாதனை!!

Published by
அகில் R

சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாரா ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது.

மாற்று திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது ஜப்பானில் உள்ள கோபே நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 100 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த பாராலிம்பிக்ஸ்ஸின் 6-வது நாளான நேற்றைய நாளில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் வீரரான சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் குண்டை எரிந்து புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆசிய அளவில் இந்த தூரத்திற்கு யாரும் வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்த சாதனையை படைத்ததுடன் குண்டெறிதல் போட்டியில் தங்கத்தையும் தட்டி தூக்கினார். இதற்கு முன்பு இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக பாரா போட்டியில் 16.21 மீட்டர் தூரம் வீசியதே ஆசிய சாதனையாக இருந்தது.

தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஈட்டி எறிதல் F64 போட்டியில் இந்தியா வீரரான சுமித் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். அதே ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். அதை தொடர்ந்து பெண்களுக்கான கிளப் த்ரோ போட்டியில் காஷிஷ் லக்ரா வெள்ளிப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றினார். அதே நேரத்தில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

இப்படி மொத்தம் இந்தியா 12 பதக்கங்கள் வென்றுள்ளது. அதில் 5 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப்பதக்கம் மற்றும் 3 வெண்கலப்பதக்கமும் உள்ளது. 12 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலிலும் 3 -வது இடத்தில் உள்ளனர். இதற்கு முன்பு கடந்த ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் இந்தியா மொத்தம் 10 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்த நிலையில் தற்போது அதனை முந்தி புதிய வரலாற்று சாதனையையும் நிகழ்த்தி உள்ளது.

இதை தவிர மேலும், 2 தங்கப்பதக்கங்களை இந்தியா அணி வெல்லும் எனவும், மொத்த பதக்கங்கள் 15-ஆக உயரலாம் எனவும் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளர் சத்யநாராயணண் தெரிவித்துள்ளார்.

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

8 hours ago