தடைக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்து இரட்டை சதம் விளாசிய பிரித்வி

Published by
murugan
  • ரஞ்சி டிராபி வரலாற்றில் அதிவேகமாக  இரட்டை சதத்தை  அடித்த மூன்றாவது வீரர் பெருமையை பெற்றார்.
  • பிரித்வி ஷா ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 8 மாதம் தடைக்கு பின் தற்போது தான் விளையாடி வருகிறார்.

இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான  ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவு லீக் போட்டியில் மும்பை அணியும் , பரோடா அணியும்  மோதியது.  டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் இறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய பரோடா அணி முதல்இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 4 விக்கெட்டை இழந்து 409 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.

இந்த இரண்டாவது இன்னிங்ஸில் பிரித்வி ஷா இரட்டை சதம் விளாசினார். பிரித்வி ஷா 179 பந்திற்கு 202 ரன்கள் குவித்தார்.அதில் 19 பவுண்டரி , 7சிக்ஸர் அடங்கும். இதனால் பரோடா அணிக்கு , மும்பை அணி 534 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதை தொடர்ந்து இறங்கிய பரோடா அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்தனர்.இதை தொடர்ந்து இன்று விளையாடிய பரோடா அணி224 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதனால் இப்போட்டியில் மும்பை அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையின் 20 வயதான தொடக்க வீரர் பிருத்வி ஷா ரஞ்சி டிராபி வரலாற்றில் மூன்றாவது அதிவேகமாக  இரட்டை சதத்தை அடித்து உள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி  ரஞ்சிக்கோப்பை தொடரில் (123 பந்தில் இரட்டைசதம் அடித்து சாதனையைப் படைத்துள்ளார்.அதைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஜேஷ் போரா 156 பந்தில் இரட்டைசதம் அடித்து உள்ளார்.தற்போது மூன்றாவது இடத்தில் பிருத்வி ஷா உள்ளார்.

பிரித்வி ஷா ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 8 மாதம் தடைக்கு பின் தற்போது தான் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Published by
murugan

Recent Posts

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

19 minutes ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

25 minutes ago

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

29 minutes ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

60 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

2 hours ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago