நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் விலகல் ..?

Published by
murugan
  • முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட் ஹெல்மெட்டில் அடித்தது. இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
  • முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் சரியாகாத நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 14-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் இந்திய அணியில் ஆறாவது இடத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் 33 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் களமிறங்கி விளையாடும்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட் ஹெல்மெட்டில் அடித்தது. இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும்போது ரிஷப் பண்ட்  கீப்பிங் செய்யவில்லை, அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் கீப்பிங் செய்தார்.இந்நிலையில் முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் சரியாகாத நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சையில்  ஏற்படும் முன்னேற்றத்திற்கு பிறகு மூன்றாவது போட்டியில் கலந்து கொள்வாரா..? அல்லது மாட்டாரா..? என்பது அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்தியா ,அவுஸ்திரேலிய இடையிலான இரண்டாவது ஒரு போட்டி நாளை ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

Published by
murugan

Recent Posts

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…

15 minutes ago

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…

1 hour ago

கடலூர் ரயில் விபத்து : உண்மை காரணம் என்ன? விசாரணையில் உறுதி செய்யப்பட்ட தகவல்!

கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…

1 hour ago

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

14 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

14 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

15 hours ago