ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 14-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் இந்திய அணியில் ஆறாவது இடத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் 33 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் களமிறங்கி விளையாடும்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட் ஹெல்மெட்டில் அடித்தது. இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும்போது ரிஷப் பண்ட் கீப்பிங் செய்யவில்லை, அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் கீப்பிங் செய்தார்.இந்நிலையில் முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் சரியாகாத நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு பிறகு மூன்றாவது போட்டியில் கலந்து கொள்வாரா..? அல்லது மாட்டாரா..? என்பது அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்தியா ,அவுஸ்திரேலிய இடையிலான இரண்டாவது ஒரு போட்டி நாளை ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…