கண்கலங்கிய ரோஹித் சர்மா…போட்டிக்கு பின் பேசியது என்ன?

Published by
பால முருகன்

உலகக்கோப்பை 2024 டி20 :  தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அசத்தலாக விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதன் பின் 172 என்ற இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது இங்கிலாந்து அணி, 16.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன்முலம் இந்திய அணி 3-வது முறையாக டி20 உலகக்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

INDvENG , Semi Final 2 [file image]
இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எமோஷனலாக கண்கலங்கினார். விராட் கோலி அவரை பார்த்ததும் கட்டியணைத்து கொண்டார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா  ” இந்த போட்டியில் நாங்கள் நிதானமாக விளையாடி வெற்றி பெற்றதாக நினைக்கிறோம். ஒரு யூனிட்டாக மிகவும் கடினமாக உழைத்தேன், இந்த வெற்றி  அனைவரின் பெரும் முயற்சி.

போட்டியில் நிலைமைகள் சவாலானதாக இருந்தபோதிலும் நாங்கள் அதனை மாற்றி அமைத்தோம். பந்துவீச்சாளர்களும் பேட்டர்களும் எங்களுடைய அணியில் நன்றாக விளையாடினார்கள். ஒரு கட்டத்தில், 140-150 சமமாக இருந்தது. ஆனால் நாங்கள் நடுவில் ரன்களைப் பெற்றோம், நானும் சூர்யாயும் இன்னும் 20-25 ரன்கள் கூடுதலாக பெறலாம் என்று நினைத்தோம்.175 ரன்கள் மிக நல்ல ஸ்கோர், பந்துவீச்சாளர்கள் அருமையாக இருந்தனர். அக்சர், குல்தீப் துப்பாக்கி சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை தொடர்ச்சியாக வீழ்த்தினார்கள்.

விராட் கோலி நம்மளுடைய அணியின் ஒரு தரமான வீரர். அவர் சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை என்று பேசி வருகிறார்கள். எந்தவொரு வீரருக்கும் இது போன்று நடக்கலாம். பெரிய போட்டிகளில் விராட் கோலியின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். 15 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடும் போது ஃபார்ம் என்பது ஒரு பிரச்னையே இல்லை. சிறந்த ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக விராட் கோலி வைத்திருக்கலாம்” எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

1 minute ago

மருத்துவமனைக்கு ‘Jack Sparrow’ வேடத்தில் சென்று குழந்தைகளை மகிழ்வித்தார் ஜானி டெப்.!

ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…

1 hour ago

“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – அமித் ஷா.!

டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…

1 hour ago

“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை” – அன்புமணி ராமதாஸ்.!

சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…

2 hours ago

”பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்”- அன்புமணி.!

சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…

2 hours ago

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…

3 hours ago