ஆக்ரோஷமா விளையாடாதீங்க! சுப்மன் கில்லுக்கு அட்வைஸ் செய்த சுனில் கவாஸ்கர்!

Published by
பால முருகன்

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லின் டெஸ்ட் போட்டியின் பார்ம் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 2 ரன், அடுத்த இன்னிங்ஸில் 26 ரன்கள் என குறைவான ரன்களை எடுத்தார்.

ஆனால், இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற  4-வது டெஸ்ட் போட்டியில் 128 ரன்கள் எடுத்தார். அந்த போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் பேட்டிங் பெரிய அளவில்  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் ஆக்ரோஷமான பாணியில் விளையாடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றில் விமர்சித்து பேசியுள்ளார்.  இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் ” டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் சற்று ஆக்ரோஷமாக விளையாடுகிறார் என்று நான் நினைக்கிறேன்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டேவிட் வார்னர்..!

நீங்கள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது இவை அனைத்திற்கும் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக அந்த வித்தியாசம் பந்தில் உள்ளது. ஏனென்றால், டெஸ்ட் போட்டியில் இருக்கும் சிவப்பு பந்து டி20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வெள்ளை பந்தை விட வேகமாக செல்லும். டெஸ்ட் போட்டியில் நாம் பேட்டை வைத்து மெதுவாக தட்டினால் கூட பந்துவேகமாக சென்றுவிடும் . அந்த நேரத்தில் நாம் இன்னும் வேகமாக அடிக்க சென்றால் அது சரியாக இருக்காது. நிதானமாக விளையாடவேண்டும்.

இந்த விஷயத்தை சுப்மன் கில் தெரிந்துகொள்ளவேண்டும். சுப்மன் கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிகவும் சிறப்பாக தொடங்கினார், ஆரம்பத்தில் எல்லாம் அவருடைய பேட்டிங் என்னை மட்டுமின்றி பலரையும் கவர்ந்தது. நான் உட்பட பலரும் அவரது ஷாட்களைப் பாராட்டினோம். அவர் மீண்டும் தனது ஃபார்மிற்கு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்” எனவும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

5 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

6 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

7 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

8 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

9 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

10 hours ago