10 நாள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கூறியதால், இங்கிலாந்தில் நடைபெற இருந்த காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணி விலகியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் தெரிவித்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தகுதி சுற்று ஆசிய விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக ஹாக்கி வீரர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர்.
இருப்பினும் இந்திய அணியினர் இங்கிலாந்தில் விளையாட வரும் பொழுது கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், இந்த விளையாட்டில் இருந்து விலகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகும் முடிவை போட்டி அமைப்பாளர்களுக்கு முன்னமே தெரிவித்து விடுமாறும் ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…