தீபக் சாஹர் வீழ்த்திய விக்கெட்டால் தொடரை வென்ற இந்திய அணி..!

Published by
மணிகண்டன்

இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
Image
அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது.அணியின் தொடக்க வீரரும் , கேப்டனுமான ரோஹித் ஆட்டம் தொடக்கத்திலே 2 ரன் எடுத்து வெளியேறினர்.பின்னர் தவானும் 19 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
இதை தொடர்ந்து களமிறங்கிய கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். இறுதியாக இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக கே.எல் ராகுல் 52  , ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்கள் அடித்தனர்.

பங்களாதேஷ் அணியில் ஷபியுல் இஸ்லாம் , சவுமியா சர்க்கார் இருவரும் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். 175 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
இதில் வங்கதேச அணியில் முஹம்மது நைம் மட்டும் தனியாளாக போராடினார். அவர் 48 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். அடுத்ததாக முகமது மிதுன் 27 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆக இறுதியாக 19.2 ஓவரில் பங்களாதேஷ் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் 6  ,சிவம் துபே 3 விக்கெட்டையும்  வீழ்த்தினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

51 minutes ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

1 hour ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

2 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

4 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago